பற்றால் வரும் நிறைவு!

பற்றால் வரும் நிறைவு!

நற்செய்தி: யோவான் 6:10-11.  

நல்வழி:  


இருக்கும் உணவு குறைந்திருந்தும்,

யாவரும் உண்ணப் பகிருகையில்,

விருப்பம் தந்த இறை மகனார்,

விருந்தாய் மாற்றிக் காட்டுகிறார்.

திருப்பம் காண விரும்பிடுவார்,

தெய்வப் பற்றால் நிறையுகையில்,

கருப்பை தொடங்கி கடைசி வரை,

காக்கும் இறையே ஊட்டுகிறார்!

ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

Leave a Reply