எனக்கு மாத்திரம் என்னாமல்!

நல்வழி:


பாத்திரம் நிரம்பி வழிகிறதே.

பசியும் அடங்கித் தெளிகிறதே.

மாத்திரம் எனக்கு என்னாமல்,

மழையாய் ஈவோம், நண்பர்களே.

ஆத்திரத்தோடு பதுக்கிடுவார்,

அழியும்படிக்கே ஒதுக்கிடுவார். 

கூத்தினையொத்த இவ்வாழ்வில்,

கொடையாய் ஆவோம் அன்பர்களே!

ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

Leave a Reply