பணிவுண்டோ?

பிறர் நம்மைப் புகழும்போது!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 18: 18-19.

18  அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக் கொள்வதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.

19  அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே.

கிறித்துவில் வாழ்வு:

நன்மையின் உருவாய் வந்திருந்தும்,

நல்லதை மட்டுமே தந்திருந்தும்,

அன்பினால் இயேசுவைப் போற்றுகையில்,

அவரோ தடுக்கிறார் துணிந்து!

என்னென்ன தீமை செய்திருந்தோம்,

எங்கெல்லாமோ ஏய்த்திருந்தோம்;

பண்பிலார் நம்மைப் புகழுகையில்,

பார்த்தோமா உள் குனிந்து?

ஆமென்.

Leave a Reply