பகை ஒழிக்கும் நன்மை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:27.
27 எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள்.
கிறித்துவில் வாழ்வு:
பகைவரை வெளியே ஒழிப்பதென்றால்,
பலுகிப் பெருகி அவர் வருவார்.
வகையாய் உள்ளில் பகை ஒழித்தால்,
வாழ்வில் அமைதி இறை தருவார்.
புகைபோல் வாழ்க்கை போகுமென்றால்,
புவியில் நிலைக்க என் செய்வார்?
தொகையாய் நன்மை பகைவருக்கும்,
தொடர்ந்து செய்து அவர் உய்வார்!
ஆமென்.
![Image may contain: cat](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-0/p526x296/46352992_2086690414695083_2296551457354153984_n.jpg?_nc_cat=106&_nc_eui2=AeGB_1IHAoHhR-EkTcIvawkkYGOWTqf6NZ2tP7WCFFe3b450izKYb5KRA11Ql4d0W97Wnkz66yRzoAPQ8I9O7Avx2rdMvDtGchS3x67KKT-IkA&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=31eed41f9b1789a4834880526b5d8931&oe=5C70CA8B)