பகை ஒழிக்கும் நன்மை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:27.
27 எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள்.
கிறித்துவில் வாழ்வு:
பகைவரை வெளியே ஒழிப்பதென்றால்,
பலுகிப் பெருகி அவர் வருவார்.
வகையாய் உள்ளில் பகை ஒழித்தால்,
வாழ்வில் அமைதி இறை தருவார்.
புகைபோல் வாழ்க்கை போகுமென்றால்,
புவியில் நிலைக்க என் செய்வார்?
தொகையாய் நன்மை பகைவருக்கும்,
தொடர்ந்து செய்து அவர் உய்வார்!
ஆமென்.
