பழிக்குப் பதில் இறைவேண்டல்!

பழிக்குப் பதில் இறைவேண்டல்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 6:28
28 உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்.
 
கிறித்துவில் வாழ்வு:
நன்மை என்னும் விதை விதைத்து,
நானும் பலநாள் வேண்டிட்டேன்.
என்ன ஏது எதுவென்றறியேன்;
ஏமாற்றமே கொண்டிட்டேன்.
தன்மையற்றோர் பழி விதைக்க,
தாவும் மரங்கள் கண்டிட்டேன்.
இன்று இதுதான் இயல்பு என்று,
இவர்களுக்காக வேண்டுகிறேன்!
ஆமென்.

Leave a Reply