நேர்மையற்றோர் முன்பு!

நேர்மையற்றோர் நடுவில்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 18:3-5.

3   அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில் போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம்பண்ணினாள்.

4   வெகுநாள்வரைக்கும் அவனுக்கு மனதில்லாதிருந்தது. பின்பு அவன்: நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனுஷரை மதியாமலும் இருந்தும்,

5   இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து என்னை அலட்டாதபடி இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:

நேர்மையற்ற நடுவரும்,

நெறிமுறைதான் பேசுவார்.

கூர்மையற்ற அறிவினால்,

கொடுமையைத்தான் பூசுவார்.

யார் கொடுப்பார் தீர்ப்பு,

என்று ஏழை ஏங்குவார்.

பார் அறியும் இறைவனோ,

பரிவினில் தாங்குவார்!

ஆமென்.

Leave a Reply