நீடிய பொறுமை!

நீடிய பொறுமை வேண்டும்!கிறித்துவின் வாக்கு லூக்கா 18:6-8.
6 பின்னும் கர்த்தர் அவர்களை நோக்கி: அநீதியுள்ள அந்த நியாயாதிபதி சொன்னதைச் சிந்தித்துப்பாருங்கள்.7 அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?8 சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.

கிறித்துவில் வாழ்வு:

இலைமறை காயாய் ஒளிப்பதனால்,

இல்லை நேர்மை என்பீரா?

விலையாய்த் தீர்ப்பு அளிப்பதனால்,

வெறுத்து, தீமை தின்பீரா?

அலைபோல் ஆடும் உள்ளத்தை

அடங்கி இருக்கச் சொல்வீரா?

நிலை கண்டிறையும் இறங்கிடுவார்;

நீடிய பொறுமை கொள்வீரா?

ஆமென்.

Leave a Reply