நாமின்று பார்ப்பது நலமாகும்!
நற்செய்தி மாலை:மாற்கு 14:10-11.
“பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் நோக்கத்தோடு தலைமைக் குருக்களிடம் சென்றான்.அவர்கள் அதை அறிந்து மகிழ்ச்சியுற்று அவனுக்குப் பணம் கொடுப்பதாக வாக்களித்தனர். அவனும் அவரை எப்படிக் காட்டிக்கொடுக்கலாம் என்று வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.”
நற்செய்தி மலர்:
கொடுமையில் கொடுமை எதுவென்றால்,
கூட இருப்பவர் குழி பறிப்பாம்.
குடும்பம், நட்பென நம்பிவிட்டால்,
கொள்ளை, கொலையும் செய்வாராம்.
விடுதலைப் பணியில் இயேசுவிடம்,
வேண்டாதொருவன் இருந்தானாம்.
நடுவில் இருப்பவர் யூதாசா?
நாமும் பார்ப்பது நல்லதுவாம்.
ஆமென்.
![Image may contain: text](https://scontent-nrt1-1.xx.fbcdn.net/v/t1.0-9/16473630_1363820810315384_112491176313910949_n.jpg?oh=646ffca3930dc0bcba391fb58326873a&oe=59124488)