நானும் குடிப்பேன்!
நற்செய்தி மாலை: மாற்கு
“சற்று அப்பால் சென்று தரையில் விழுந்து, முடியுமானால் அந்த நேரம் தம்மைவிட்டு விலகுமாறு இறைவனிடம் வேண்டினார்.36 ″ அப்பா, தந்தையே எல்லாம் உம்மால் இயலும். இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும் ″ என்று கூறினார்.”
நற்செய்தி மலர்:
கையில் தந்த கிண்ணம் பிடித்தேன்;
கனவாய் நினைத்துக் கசப்பைக் குடித்தேன்.
பையில் இன்னும் இருப்பது கண்டு,
பதறி நானும் நெஞ்சு துடித்தேன்.
ஐயா, எனக்குப் போதும் என்று,
அவற்றை வீசி கையும் கடித்தேன்.
மெய்யானவரோ, என்னைப் பிடித்தார்;
மெதுவாய் எடுத்தேன், துன்பம் குடித்தேன்!
ஆமென்.
![No automatic alt text available.](https://scontent.fdel1-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/17103471_1391650810865717_253732148340338257_n.jpg?oh=a3e5f0004f253b3ab56ee073a41402de&oe=5964556B)