அறத்தைப் பிடிப்போர் நிலைக்கின்றார்!
எப்படிச் சேர்த்தார் எனப் பாராமல்,
எவ்வளவென்று மலைக்கின்றார்.
இப்படித் தவற்றைப் புகழத் தொடங்கி,
எளியரும் பண்பைக் கலைக்கின்றார்.
தப்பினில் வளர்ந்தோர் தலைவர் ஆகி,
தரணியைச் சீர் குலைக்கின்றார்.
அப்படிப்பட்டோர் கையினில் மீள,
அறத்தைப் பிடிப்போர் நிலைக்கின்றார்!
-கெர்சோம் செல்லையா.
![Image may contain: 1 person, text](https://fb-s-d-a.akamaihd.net/h-ak-xtl1/v/t1.0-0/p240x240/17191189_1390881190942679_8938545927479872669_n.jpg?oh=64ed915978d2c6e04809a0f26fa6581a&oe=5938B4BA&__gda__=1496987042_d3c3c8a3cb6017e9f3ee7d7ee2cfeb5d)