நாட்டை வளைத்தது போதாதென்று,
நாம் நுழைந்தோம் அவர் காட்டில்.
வீட்டை இழந்த விலங்குகள் இன்று,
விருந்திற்கு வந்தார் நம் வீட்டில்.
மாட்டை அடித்து, மானையும் பிடித்து
மழைதரும் மரத்தையும் அழிக்கின்றோம்.
காட்டில் வாழும் விலங்கிடமிருந்து,
கற்க எப்போது விழிக்கின்றோம்?
-கெர்சோம் செல்லையா.
![Image may contain: outdoor and nature](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-0/p526x296/47687716_2119282921435832_5580912136856535040_n.jpg?_nc_cat=107&_nc_ht=scontent.fmaa3-1.fna&oh=02e3ad37b5510a1b6606fbf7d7810bb6&oe=5CA85CEE)