நாட்டை வளைத்தது போதாதென்று,

நாட்டை வளைத்தது போதாதென்று,
நாம் நுழைந்தோம் அவர் காட்டில்.
வீட்டை இழந்த விலங்குகள் இன்று,
விருந்திற்கு வந்தார் நம் வீட்டில்.
மாட்டை அடித்து, மானையும் பிடித்து
மழைதரும் மரத்தையும் அழிக்கின்றோம்.
காட்டில் வாழும் விலங்கிடமிருந்து,
கற்க எப்போது விழிக்கின்றோம்?
-கெர்சோம் செல்லையா.

Image may contain: outdoor and nature

Leave a Reply