நலம் பெற்றார், மீட்பற்றார்!

நலமடைந்தும், மீட்புறாதது. ஏன்?

நலமடைந்தும், மீட்புறாதது. ஏன்?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 17:17-19.
17 அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே?18 தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொல்லி,19 அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.
கிறித்துவில் வாழ்வு:
நலம் அடையுமுன் இணைந்திருந்தார்;
நட்புடன் பேசிப் பிணைந்திருந்தார்.
குலம் ஒன்றெனக் கொண்டிருந்தார்;
கொடுக்கல் வாங்கலும் கண்டிருந்தார்.
கலம் நிரம்பிட வேறுபட்டார்.
கடவுளை விட்டு மாறுபட்டார்.
நிலம் தேடிடும் நன்றியற்றார்,
நிலைவாழ்வையும் இன்று அற்றார்!
ஆமென்.

Leave a Reply