நன்றி!

நன்றி!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 17:17-19.

17  அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே?

18  தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொல்லி,

19  அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.

கிறித்துவில் வாழ்வு:

நன்றி என்ற சொல்லிற்கு,

நாமே படிவம் என்றானால்,

இன்று பலபேர் தேடுகிற,

இனிய மீட்பு அடுத்திருக்கும்.

அன்று தொட்டு இன்றுவரை,

அரிய பண்பை விட்டதினால்,

கன்று காளை வடிவத்தில்,

பன்றிதானே படுத்திருக்கும்!

ஆமென்.

Leave a Reply