நம்பிக்கையற்றவரே!

நம்பிக்கையற்ற தலைமுறையே!

நற்செய்தி மாலை: மாற்கு 9:16-19.
“அவர் அவர்களை நோக்கி, ‘ நீங்கள் இவர்களோடு எதைப்பற்றி வாதாடுகிறீர்கள்? ‘ என்று கேட்டார். அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர் அவரைப் பார்த்து, ‘ போதகரே. தீய ஆவி பிடித்துப் பேச்சிழந்த என் மகனை உம்மிடம் கொண்டு வந்தேன். அது அவனைப் பிடித்து அந்த இடத்திலேயே அவனைக் கீழே தள்ளுகிறது. அவன் வாயில் நுரை தள்ளிப் பற்களை நெரிக்கிறான்; உடம்பும் விறைத்துப்போகிறது. அதை ஓட்டிவிடும்படி நான் உம் சீடரிடம் கேட்டேன்; அவர்களால் இயலவில்லை ‘ என்று கூறினார். அதற்கு அவர் அவர்களிடம், ‘ நம்பிக்கையற்ற தலைமுறையினரே. எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும்? எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக்கொள்ள இயலும்? அவனை என்னிடம் கொண்டுவாருங்கள் ‘ என்று கூறினார்.”

நற்செய்தி மலர்:

நம்பிக்கை அற்ற தலைமுறையே,
நன்கு நோக்கு உன் குறையே!

கும்பிடச் செல்லும் கோயிலிலே,
கிறித்தவன் என்பதில் பயனிலையே!

எம்பி நிற்கவும் வலுவற்றே,
ஏழையர் கிடக்கிறார், பார் சற்றே!

தும்பிக் கையாய் நீ இன்றே,
தூக்கி உயர்த்து, இது நன்றே!

ஆமென்.

Image may contain: outdoor and nature
LikeShow More Reactions

Comment

Leave a Reply