நன்மை மறுக்கும் சட்டம்!

நற்செய்தி: யோவான் 5:10.

நல்வழி:


மாற்றார் செய்யும் நன்மை கண்டு, 

மனதில் புகழ்வார் பலருண்டு.

வேற்றார் என்று வெறுப்பு கொண்டு,

வெறியில் இகழ்வார் சிலருண்டு. 

போற்றார் கூறும் சட்டம் கண்டு,

பொழியாதிருப்பதில் தவறுண்டு.

ஆற்றார் என்ற பழிச் சொல் கொண்டு, 

அழிய மறுப்பார் எவருண்டு?


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

Leave a Reply