விளம்பரமற்ற தொண்டு!
நற்செய்தி: யோவான் 5:11-13.
நல்வழி:
நன்மைச் செய்த மனிதர் எவரும்,
நன்றிக் கடனை நாடுகையில்,
தன்னை மறைத்துத் தனியே செல்லும்
தன்னலமற்ற தலைவன் யார்?
இன்னாள் இதனை எண்ணும் எவரும்,
இயேசு பாதை தேடுகையில்,
சொன்னால் வியப்பாகும் வகையில்,
சொரிவாருள்ளில், தாழ்மை பார்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.