நன்மைக்கேது விடுமுறை?

நன்மைக்கேது விடுமுறையாமே!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 13:14-17.

14இயேசு ஓய்வுநாளிலே சொஸ்தமாக்கினபடியால், ஜெப ஆலயத்தலைவன் கோபமடைந்து, ஜனங்களை நோக்கி: வேலைசெய்கிறதற்கு ஆறுநாள் உண்டே, அந்த நாட்களிலே நீங்கள் வந்து சொஸ்தமாக்கிக்கொள்ளுங்கள், ஓய்வுநாளிலே அப்படிச் செய்யலாகாது என்றான்.
15கர்த்தர் அவனுக்குப் பிரதியுத்தரமாக: மாயக்காரனே, உங்களில் எவனும் ஓய்வுநாளில் தன் எருதையாவது தன் கழுதையையாவது தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டுபோய், அதற்குத் தண்ணீர் காட்டுகிறதில்லையா?
16இதோ, சாத்தான் பதினெட்டு வருஷமாய்க் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக்கட்டிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியதில்லையா என்றார்.
17அவர் அப்படிச் சொன்னபோது, அவரை விரோதித்திருந்த அனைவரும் வெட்கப்பட்டார்கள். ஜனங்களெல்லாரும் அவரால் செய்யப்பட்ட சகல மகிமையான செய்கைகளைக்குறித்தும் சந்தோஷப்பட்டார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
எல்லா நாளும் இறையின் நாளே;
எம்மணித் துளியும் அவரினருளே.
செல்லா மடமை ஒழிக்கத்தானே,
செய்தார் இயேசு ஓய்விலுந்தானே.
இல்லா நன்மை கேட்போர் நாமே;
எடுக்கும்போது மணி பாரோமே.
நல்லாயிருப்பார் செய்வோராமே;
நன்மைக்கேது விடுமுறையாமே!
ஆமென்.


Leave a Reply