பொங்கல் வாழ்த்து!
எங்கும் எவர்க்கும் உண்ணும் உணவை,
என்றும் தருமிறையே போற்றி.
பொங்கும் இனிய உணவில் அன்பை,
புகட்டும் நல்ல மனையே போற்றி.
மங்கும் நிலையில் மயங்கும் உழவை,
மகிழ்ந்து செய்யும் நட்பே போற்றி;
உங்கள் உழைப்பே நாட்டின் வலிமை;
உணரு தமிழ் இனமே போற்றி!
கெர்சோம் செல்லையா.