தெளிவுறும் காலம் வரும்வரை

அடியார் தெளிவுறும் காலம் வரையில்….
நற்செய்தி மாலை: மாற்கு 9:9-10.
“அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்த போது அவர், ‘ மானிட மகன் இறந்து உயிர்த்தெழும் வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது ‘ என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். அவர்கள் இவ்வார்த்தையை அப்படியே மனத்தில் இருத்தி, ‘ இறந்து உயிர்த்தெழுதல் ‘ என்றால் என்னவென்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.”
நற்செய்தி மலர்:
அடியார் தெளிவுறும் காலம் வரையில்,
அமைதியில் கற்பார், அறிவீரே.
அறியாதவராய்ச் சொற்போர் புரிதல்,
அழகிலை என்பதும் தெரிவீரே.
விடியா இருட்டில் வெளிச்சம் கொடுத்தல்,
விளக்கின் பணிதான் அறிவீரே!
வேண்டும் எண்ணெய் நமது விளக்கில்;
விண்ணின் விருப்பைத் தெரிவீரே!
ஆமென்.

Image may contain: 1 person , night
LikeShow More Reactions

Comment

Leave a Reply