தூதன் வருவான்!
நற்செய்தி: யோவான் 5:1-4.
நல்வழி:
எவ்வடிவெடுத்து, தூதன் வருவான்,
என்றுரைப்பாரும் இன்றில்லை.
அவ்வடிவுரைக்க, அறியேனெனினும்,
அதை நம்பாதவன் என்றில்லை.
செவ்வடிவெடுக்கும் தூதர் கதையில்,
சேர்க்கும் கற்பனை ஒன்றில்லை.
இவ்வடிப்பாடல் எழுதும் உரையில்,
ஏற்படும் ஐயம் நன்றில்லை!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.