தூதன் வருவான்!

தூதன் வருவான்!


நற்செய்தி: யோவான் 5:1-4. 

நல்வழி: 


எவ்வடிவெடுத்து, தூதன் வருவான், 

என்றுரைப்பாரும் இன்றில்லை.

அவ்வடிவுரைக்க, அறியேனெனினும்,

அதை நம்பாதவன் என்றில்லை.

செவ்வடிவெடுக்கும் தூதர் கதையில், 

சேர்க்கும் கற்பனை ஒன்றில்லை.

இவ்வடிப்பாடல் எழுதும் உரையில்,

ஏற்படும் ஐயம் நன்றில்லை! 


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

Leave a Reply