நன்மை செய்யும் இடங்களிலே!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:14-15.
14பின்பு அவர் ஊமையாயிருந்த ஒரு பிசாசைத் துரத்தினார். பிசாசு புறப்பட்டுப்போனபின்பு ஊமையன் பேசினான்; ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள். |
15அவர்களில் சிலர்: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலைக் கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள். கிறித்துவில் வாழ்வு: நன்மை செய்யும் இடங்களிலெல்லாம், நம்பா மனிதர் தூற்றிடலாம். பன்மை மடங்கு பட்டவரெல்லாம், பாரில் உண்டு, தேற்றிடலாம். இன்னிலமிறங்கி, இடரேற்றவராம் இயேசுவின் அருளால், ஆற்றிடலாம். என்னே துன்பம், யார் கொடுத்தாலும், இறைவன் உண்டு, போற்றிடலாம்! ஆமென். |