சோர்ந்து போகாதீர்!

நன்மை செய்யும் இடங்களிலே!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:14-15.

14பின்பு அவர் ஊமையாயிருந்த ஒரு பிசாசைத் துரத்தினார். பிசாசு புறப்பட்டுப்போனபின்பு ஊமையன் பேசினான்; ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
15அவர்களில் சிலர்: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலைக் கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
நன்மை செய்யும் இடங்களிலெல்லாம்,
நம்பா மனிதர் தூற்றிடலாம்.
பன்மை மடங்கு பட்டவரெல்லாம்,
பாரில் உண்டு, தேற்றிடலாம்.
இன்னிலமிறங்கி, இடரேற்றவராம்
இயேசுவின் அருளால், ஆற்றிடலாம்.
என்னே துன்பம், யார் கொடுத்தாலும்,
இறைவன் உண்டு, போற்றிடலாம்!
ஆமென்.

Leave a Reply