சோதிக்கும் காலமும் நேரமும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 14:19.
19 வேறொருவன்: ஐந்தேர்மாடு கொண்டேன், அதைச் சோதித்துப் பார்க்கப் போகிறேன், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
கிறித்துவில் வாழ்வு:
சோதித்துப் பாரா மாட்டை வாங்கும்
சோம்பேறி ஒருவன் சொல்வானாம்.
பாதிப்பு உண்டோ என்று பார்க்க,
பகலல்ல, இரவிலே செல்வானாம்.
நீதிக்கருத்தினை ஏற்க மறுப்பவர்,
நேரமுன் பொய்யே சொல்வாராம்.
ஆதிக்க நாட்கள் அடங்கும்போது,
ஐயோ, என்று செல்வாராம்!
ஆமென்.