சேய்கள் நாமே!

சேய்கள் நாமே!கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:25-26.

25கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்.
26மிகவும் அற்பமான காரியமுதலாய் உங்களால் செய்யக்கூடாதிருக்க, மற்றவைகளுக்காக நீங்கள் கவலைப்படுகிறதென்ன?

கிறித்துவில் வாழ்வு:
உண்ணக் கவலை, உடுக்கக் கவலை,
உறங்கும் முன்னே ஒடுங்காக் கவலை.
எண்ணும் நமக்குக் கிடைத்தது என்ன?
எங்கு பார்ப்பினும் நோய்கள்தாமே!
விண்ணின் அருளால் வாழும் நமக்கு,
வேண்டாம் இந்த நோய்தரும் கவலை.
கண்ணை மூடி, கடவுளைக் கேட்போம்;
காக்கும் அவர்க்குச் சேய்கள் நாமே!
ஆமென்.

Leave a Reply