சென்றவர் அழிவு!

அன்றைய யூதர் கேட்கவில்லை!  
கிறித்துவின் வாக்கு: லூக்கா 21:23-24.  

23  அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ, பூமியின்மேல் மிகுந்த இடுக்கணும் இந்த ஜனத்தின்மேல் கோபாக்கினையும் உண்டாகும்.

24  பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப்போவார்கள்; புறஜாதியாரின் காலம் நிறைவேறும்வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும்.  

கிறித்துவில் வாழ்வு:  

அன்றைய யூதர் கேட்கவில்லை;  

ஆண்டவர் வாக்கை ஏற்கவில்லை;  

வென்றிடும் உரோமர் அழிக்கையிலே,  

விழுந்தார், வேறு வழியுமில்லை.  

இன்றைய நாளின் கிறித்தவரே,  

இயேசுவின் அருட்பூ பறித்தவரே,   

சென்றவர் அழிவைக் கேட்டிட்டும்,  

சிறை மீளாவிடில் விழியுமில்லை!  

ஆமென்.

Leave a Reply