விண் அதிரும் காட்சி!

விண் அதிரும் காட்சி!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 21:25-26.  

25  சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்; பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்; சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும்.

26  வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்; ஆதலால் பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்.  

கிறித்துவில் வாழ்வு: 

மண்ணின் அதிர்வைத் தாங்க இயலா   

மன வலுவற்ற மக்கள் நாம்,  

விண்ணின் அதிர்வில் எப்படி நிற்போம்? 

விளக்கும் அறிவில் எவருமுண்டோ? 

எண்ணிப் பார்த்து எழுத இயலா,  

ஈவுகள் கேட்டுப் பெற்றவர் நாம்,  

கண்ணில் அந்தக் காட்சி வருமுன்,  

கடக்கக் கேட்பதில் தவறுமுண்டோ?  

ஆமென்.

Leave a Reply