சுமை!

அடுத்தவன் தலைமேல்…
கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:45-46.45
அப்பொழுது நியாயசாஸ்திரிகளில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, நீர் இப்படிச் சொல்லுகிறதினால் எங்களையும் நிந்திக்கிறீரே என்றான்.46அதற்கு அவர்: நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு ஐயோ, சுமக்க அரிதான சுமைகளை மனுஷர்மேல் சுமத்துகிறீர்கள்; நீங்களோ உங்கள் விரல்களில் ஒன்றினாலும் அந்தச் சுமைகளைத் தொடவும்மாட்டீர்கள்.

கிறித்துவில் வாழ்வு:
அடுத்து ஒருவன் தலைமேல் வைத்து,
அவன் சரியில்லை என்னும் நாம்,
எடுத்து, சுமையினை ஏந்தி, பிடித்து,
என்சுமை என்று சுமந்ததுண்டா?
படுத்து, உருண்டு, பாடி, நடித்து,
பழங்கதை பேசும் கிறித்தவர் நாம்,
கெடுத்து விட்ட ஊழியம் சிறக்க,
கிறித்து சிலுவை சுமந்ததுண்டா?
ஆமென்.

Leave a Reply