அப்பன் கொன்றான்….

அப்பன் கொன்றான், பிள்ளை புதைத்தான்.
கிறித்துவின் வாக்கு: லூக்கா 11:47-48.

47உங்களுக்கு ஐயோ, உங்கள் பிதாக்கள் கொலைசெய்த தீர்க்கதரிசிகளுக்குக் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்.48ஆகையால் உங்கள் பிதாக்களுடைய கிரியைகளுக்கு நீங்களும் உடன்பட்டவர்களென்று சாட்சியிடுகிறீர்கள்; எப்படியென்றால், உங்கள் பிதாக்கள் அவர்களைக் கொலைசெய்தார்கள், நீங்களோ அவர்களுக்குக் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்.

கிறித்துவில் வாழ்வு:
அப்பன் கொன்றான், பிள்ளை புதைத்தான்.
அழகாய்ப் பின்னர் கல்லறை அமைத்தான்.
தப்பாய் நடந்தான், தலைமுறை வளர்த்தான்.
தவற்றின் உணவைத் தானும் சமைத்தான்.
எப்போதிவனும் தன்னை உணர்வான்?
இவைகள் விட்டு, உம் வழி தெரிவான்?
ஒப்பாரில்லா இறைவனின் மகனே,
உம்மைக் காட்டும், நன்மை புரிவான்!
ஆமென்.

Leave a Reply