சீர்படுத்தும் இறையே!

சீர்படுத்தும் இறையே!

கிறித்துவின்  வாக்கு:லூக்கா 5:8-9.
8 சீமோன் பேதுரு அதைக் கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப்போகவேண்டும் என்றான்.
9 அவர்கள் திரளான மீன்களைப் பிடித்ததினிமித்தம், அவனுக்கும் அவனோடுகூட இருந்த யாவருக்கும் பிரமிப்புண்டானபடியினால் அப்படிச் சொன்னான்.

கிறித்துவில் வாழ்வு:
அய்யா, உம் அடி வரும் வரையில்,
அநீதி, தவற்றையும் வான் புகழ்ந்தேன்.
பொய்யாய் என்னை மேலுயர்த்திப்
புனித வடிவிலும் நான் திகழ்ந்தேன்.
மெய்யாம் உம்மிடம் வந்த பின்னர்,
மேன்மையறிந்து எனை இகழ்ந்தேன்.
செய்யாதவையுடன் செய்தவையும்,
சீர் படுத்தும்மில், இனி மகிழ்வேன்!
ஆமென்.

Leave a Reply