எளிமையிலே வலிமை!

எளிமையிலே வலிமை!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 5:10-11.
10 சீமோனுக்குக் கூட்டாளிகளான செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அந்தப்படியே பிரமித்தார்கள். அப்பொழுது இயேசு சீமோனை நோக்கி: பயப்படாதே, இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய் என்றார்.
11 அவர்கள் படவுகளைக் கரையிலே கொண்டுபோய் நிறுத்தி, எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
யானை வலிமை இருந்தால்தானே,
எதையும் செய்ய முடியுமென்பார்.
சேனை திரண்டு சென்றால்தானே,
செருவில் வெற்றி படியுமென்பார்.
வானை விடுத்த இறைவனின் மகனோ,
வலிமையை எளிமையில் காட்டுகிறார்.
மீனை பிடிக்கிற ஏழையராலே,
மீட்பின் அரசை நாட்டுகிறார்!
ஆமென்.

Image may contain: 1 person, standing, ocean, child, outdoor and water
LikeShow More Reactions

Comment

Leave a Reply