கொரோனா கூறும் செய்தி!
என்னால் கூடும், யாவும் கூடும்;
என்பது அல்ல, இறைவேண்டல்.
தன்னால் அல்ல, இறையால் கூடும்;
தாழ்ந்து சொல்வதே, இறைவேண்டல்.
முன்னால் நிற்கும் நோயும் கூறும்,
முதற்கண் தேவை, இறைவேண்டல்.
சொன்னால் கேட்கும், நாடே மகிழும்;
சொல்வோம் நாமும், இறைவேண்டல்!
-கெர்சோம் செல்லையா.