கைகள் குவிக்கின்றோம்!
காட்டுத் தீயில் மாட்டிக்கொண்ட
காளையர் கன்னியர் மாணவரே,
ஏட்டுச் சுரைக்காய் என்றாகாது,
எட்டா மலைமேல் போனவரே.
மீட்டுக் கொள்ள வழியறியாது,
மிரண்டு கீழே தவிக்கின்றோம்;
ஆட்டுவிக்கும் ஆண்டவர் காப்பார்;
அனைவரும் கைகள் குவிக்கின்றோம்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
![No automatic alt text available.](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-0/s526x395/29063126_1765181846845943_1716347675412004864_n.jpg?_nc_eui2=v1%3AAeHIxSHtuEbDMAdc-XvhXBsg4x4YG3xjT0a-066tN-Rpkv9FmDu1VrAMT78MdFnPHGOkLQqUGjsQ9d7ofFIlVNK3ZTS1o9h4Z1-5nIHjD9HFGA&oh=dc616a76422c492360a5cc07b17915e1&oe=5B31A049)