கெட்டார் கெட்டார்!

கெட்டார் கெட்டார்!

மெய்யென்றால் சதை காட்டும் திரைப்படத்தார்,
மேலோங்கி ஒழுக்கத்தைக் கைவிட்டார்.
பொய்யாலே புனைந்துரைக்கும் ஊடகத்தார்,
பொருளீட்ட அவ்வழுக்கை வெளியிட்டார்.

அய்யரெல்லாம் அருள் மறந்து போய்விட்டார்;
அறமறியாத் தலைவர்கள்தான் உயர்ந்திட்டார்.
உய்யும்வழி உரைப்பவரும் உறங்கிட்டார்.
உண்மையைத் தெரியாரோ கெட்டார், கெட்டார்!

-கெர்சோம் செல்லையா.

Leave a Reply