குளிப்போம் தெய்வ வாக்கினுள்ளே!
நற்செய்தி மாலை 7:1-4.
“ஒருநாள் பரிசேயரும் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர் சிலரும் அவரிடம் வந்து கூடினர். அவருடைய சீடருள் சிலர் தீட்டான, அதாவது, கழுவாத கைகளால் உண்பதை அவர்கள் கண்டார்கள். பரிசேயரும், ஏன் யூதர் அனைவருமே, தம் மூதாதையர் மரபைப் பின்பற்றிக் கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை; சந்தையிலிருந்து வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே உண்பர். அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் இன்னும் பல இருந்தன.”
நற்செய்தி மலர்:
வெளியின் கறையைக் கழுவுகிறோம்.
வெள்ளப் பெருக்கில் முழுகுகிறோம்.
எளிமை, தாழ்மை, உண்மையென்றால்
இறையை விட்டே நழுவுகிறோம்.
தெளிவைத் தேடும் அன்பர்களே,
தேவை தூய்மை நெஞ்சங்களே.
குளிப்போம் தெய்வ வாக்கினுள்ளே;
குற்றம் மறையும் வாழ்வினிலே!
ஆமென்.
![Gershom Chelliah's photo.](https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/13015669_1120535481310586_3292957785737540618_n.jpg?oh=d26b45ce1ddc9d9739268ddd47531f05&oe=577782E6)