உடையால் நலமா?

உடையால் உடல் நலம்!
நற்செய்தி மாலை: மாற்கு 6:53-56:
“அவர்கள் மறு கரைக்குச் சென்று கெனசரேத்துப் பகுதியை அடைந்து படகைக் கட்டி நிறுத்தினார்கள். அவர்கள் படகைவிட்டு இறங்கிய உடனே, மக்கள் இயேசுவை இன்னார் என்று கண்டுணர்ந்து, அச்சுற்றுப் பகுதி எங்கும் ஓடிச் சென்று, அவர் இருப்பதாகக் கேள்விப்பட்ட இடங்களுக்கெல்லாம் நோயாளர்களைப் படுக்கையில் கொண்டு வரத் தொடங்கினார்கள். மேலும் அவர் சென்ற ஊர்கள், நகர்கள், பட்டிகள் அனைத்திலும் உடல் நலம் குன்றியோரைப் பொதுவிடங்களில் கிடத்தி, அவருடைய மேலுடையின் ஓரத்தையாவது அவர்கள் தொட அனுமதிக்குமாறு அவரை வேண்டினார்கள். அவரைத் தொட்ட அனைவரும் நலமடைந்தனர்.”

நற்செய்தி மலர்:
அடடா, இது என்ன அதிசயம்?
ஆண்டவர் உடையால் உடல் நலம்!
மடமை என்று சொன்னோரும்,
மகிழ்ந்து அடைவதைக் கண்பாரும்!
உடைகளால் இல்லை அதிசயம்.
உறுதியாம் பற்றால் இது வரும்.
கொடுப்பவர் கிறித்து, தெளிவுறும்;
கோடி நன்மை, நீர் பெறும்!
ஆமென்.

Gershom Chelliah's photo.
LikeShow More Reactions

Comment

Leave a Reply