கிறித்துவின் வாக்கும் கிறித்துவில் வாழ்வும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 1:1-4.
“மகா கனம்பொருந்திய தேயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை,ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக் குறித்துச் சரித்திரம் எழுத அநேகம்பேர் ஏற்பட்டபடியினால், ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டுமென்று,அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று.”
கிறித்துவில் வாழ்வு:
எண்ணற்றோர்கள் எழுதி உரைத்த,
இறைவாக்கினையே நானும் தந்தேன்;
கண்ணற்றோனாய் நானுமிருந்தேன்;
கண் திறந்தாரே காட்ட வந்தேன்.
உண்மை இதுவே, நன்மை வழியே.
உணர்த்தினாரே, எழுதுகின்றேன்.
மண்ணும் நாடேன், மாடும் தேடேன்;
மன்னன் இறையே, புகழுகின்றேன்!
ஆமென்.
![Image may contain: 1 person](https://fb-s-c-a.akamaihd.net/h-ak-fbx/v/t1.0-0/s526x395/19260804_1498659106831553_8476562697180034477_n.jpg?oh=1ff11d8f325920ae7d1df6194b75d117&oe=59DB10E4&__gda__=1507149130_fe61f74c94eb84a3dd3f78865cc916b9)