காட்டில் கேட்ட ஒலி!
நற்செய்தி: யோவான் 1:21-23.
நல்வழி:
காட்டிலொலிக்கும் கடவுள் வாக்கு,
வீட்டிலும் வந்து, ஒலிக்கட்டுமே.
மீட்டியிசைக்கும் அவ்வொலி கேட்டு,
நாட்டிலும் மக்கள், சொலிக்கட்டுமே.
ஏட்டினில் பார்த்து, எதையோ சேர்த்து,,
தீட்டினில் புரள்தல், முடிக்கட்டுமே.
மாட்டிக்கொண்டோர் நிலையும் கண்டு,
நீட்டிடும் அன்பு, பிடிக்கட்டுமே!
ஆமென்.
-செல்லையா.