காட்டில் கேட்ட ஒலி

காட்டில் கேட்ட ஒலி!  

நற்செய்தி: யோவான் 1:21-23.  

நல்வழி:  


காட்டிலொலிக்கும் கடவுள் வாக்கு,  
வீட்டிலும் வந்து, ஒலிக்கட்டுமே. 
மீட்டியிசைக்கும் அவ்வொலி கேட்டு,  
நாட்டிலும் மக்கள், சொலிக்கட்டுமே.   

ஏட்டினில் பார்த்து, எதையோ சேர்த்து,,  

தீட்டினில் புரள்தல், முடிக்கட்டுமே.  
மாட்டிக்கொண்டோர் நிலையும் கண்டு,  
நீட்டிடும் அன்பு, பிடிக்கட்டுமே! 
ஆமென்.  
-செல்லையா.

Leave a Reply