கலங்கும் கயவர்!

கலங்கும் கயவர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:7-9.
7 அப்பொழுது காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது அவரால் செய்யப்பட்டயாவையும் கேள்விப்பட்டதுமன்றி; சிலர் யோவான் மரித்தோரிலிருந்து எழுந்தான் என்றும்,
8 சிலர் எலியா தோன்றினான் என்றும், வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவன் உயிர்த்தெழுந்தான் என்றும் சொல்லிக்கொண்டபடியால், கலக்கமடைந்து:

யோவானை நான் சிரச்சேதம்பண்ணினேன், இவன் இப்படிப்பட்டவைகளைச் செய்கிறான் என்று கேள்விப்படுகிறேனே! இவன் யார்? என்று ஏரோது சொல்லி, அவரைப் பார்க்க விரும்பினான்.

கிறித்துவில் வாழ்வு:
கலக்கிடும் கயவர் கலங்குவார் ஒருநாள்.
காணும் காட்சிகள் கலக்கும் அந்நாள்.
விலக்கிடும் தீமைகள் வேண்டாம் இந்நாள்,
விலகச் செய்கிறார் இறைவன் முன்னால்.
துலக்கிடும் கலன்களின் அழகு எதனால்?
தூய ஆவியர் செயல்படுவதனால்.
அலக்கிட உள்ளம் கொடுப்பீர் இதனால்,
அந்நாளேதான் இனிய பொன்னாள்!
ஆமென்.

Leave a Reply