பிணி களைவோம்!

பிணி களைவோம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:6
6 அவர்கள் புறப்பட்டுப்போய், கிராமங்கள்தோறும் திரிந்து, எங்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, பிணியாளிகளைக் குணமாக்கினார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
இயேசு என்றால் எதுவெனக் கேட்கும்,
ஏழ்மையின் ஊர்கள் ஈங்குண்டே.
காசு பொருளே கடவுள் என்னும்,
கடை நிலையாளரும் ஆங்குண்டே.
ஆசு இரிய, இறை வாக்குரைக்கும்,
அன்புப் பணியில் பாங்குண்டே.
பேசுவதோடு நிற்கிறோம் நாமும்;
பிணி களையாவிடில் தீங்குண்டே!
ஆமென்.

Leave a Reply