கருப்பு ஆட்டின் கதை!

கருப்பு ஆட்டின் கதை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 15:5-7.
5 கண்டுபிடித்தபின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின்மேல் போட்டுக்கொண்டு,6 வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன் என்னோடுகூடச் சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா?7 அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
கிறித்துவில் வாழ்வு:
இருப்பு இருந்தால், இன்பம் ஆகும்;
இழந்து பெற்றால், இரட்டிப்பாகும்.
கருப்பு ஆட்டின் கதையிது ஆகும்;
கடவுட்மீட்போ, பேரின்பமாகும்.
விருப்பு மாறின் என்ன ஆகும்?
விழுந்த ஆட்டின் கதைபோலாகும்.
திருப்புவதுவும் இறைமகன் ஆகும்;
திரும்புதலுமோ பேரின்பமாகும்!
ஆமென்.

Leave a Reply