விளக்கு!

விளக்கு!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 15:8-10.
8   அன்றியும், ஒரு ஸ்திரீ பத்து வெள்ளிக்காசை உடையவளாயிருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் ஜாக்கிரதையாய்த் தேடாமலிருப்பாளோ?9   கண்டுபிடித்தபின்பு, தன் சிநேகிதிகளையும் அயல் வீட்டுக்காரிகளையும் கூட வரவழைத்து: காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூடச் சந்தோஷப்படுங்கள் என்பாள் அல்லவா?10  அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.


கிறித்துவில் வாழ்வு:

காணாமல்போன, காசைத் தேட,

கையிலெடுத்தாள் விளக்கு.

தானாக வருமே என்றுயிராமல்,

தன்வீடு துடைத்ததை, விளக்கு.

கோணாமல் நேர்வழி செல்லுவதற்கு,

கொளுத்த வேண்டும் விளக்கு.

நாணாத வாழ்வை, நம்மிறை தருவார்;

நன்மை செய்து விளக்கு!

ஆமென்.

Leave a Reply