![Image may contain: outdoor and nature](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-0/p235x350/37743854_1929845293712930_509391668290519040_n.jpg?_nc_cat=0&oh=655df5c901c50d1d5742846bd43df4d0&oe=5BC63E5F)
கனியற்ற மரம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 3:9.
9 இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால் நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் என்றான்.
கிறித்துவில் வாழ்வு:
அடர்ந்து மரங்கள் அழகு தந்த
அருமைத் தோட்டம் கண்டேன்.
தொடர்ந்து அவைகள் புசிக்கத் தந்த,
தூய கனிகளும் உண்டேன்.
படர்ந்து வளர்ந்தும் பயனில்லாத
பாழ் மரமும் பார்த்தேன்.
விடர்ந்து வீணாய்ப் போன அதனை,
வெட்டி எரிக்கச் சேர்த்தேன்!
ஆமென்.