கண்ணற்றோர் காண்கின்றார்!

கண்ணற்றோர் காண்கின்றார்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 7:20-23.
20 அந்தப்படி அவர்கள் அவரிடத்தில் வந்து: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா? என்று கேட்கும்படி யோவான்ஸ்நானன் எங்களை உம்மிடத்திற்கு அனுப்பினார் என்றார்கள்.
21 அந்தச் சமயத்திலே நோய்களையும் கொடிய வியாதிகளையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த அநேகரை அவர்குணமாக்கி, அநேகங் குருடருக்குப் பார்வையளித்தார்.
22 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் போய், கண்டவைகளையும் கேட்டவைகளையும் யோவானுக்கு அறிவியுங்கள்; குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது.
23 என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
கண்ணற்றோர் காண்கின்றார்;
காதற்றோர் கேட்கின்றார்.
எண்ணற்றோர் பிணி நீங்கி,
எழுந்தின்று நடக்கின்றார்.
உண்ணாது அழுபவரே,
உம் கண்ணீர் அவர் அறிவார்.
என்னாளும் நிலைநிற்கும்,
இறைவாக்கால் அருள் புரிவார்!
ஆமென்.

Image may contain: sunglasses

Leave a Reply