ஒளி!
நற்செய்தி வாக்கு: யோவான் 1:4-5.
4. அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
5. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.
நல்வழி பாட்டு:
இருளாயிருக்கும் இப்புவியெங்கும்,
இறையே ஒளியாய் இருக்கின்றார்.
அருளாயதனை நமக்கு ஈந்தும்,
அறிவில்லாதார் வெறுக்கின்றார்.
ஒருநாளேனும் உண்மை உணர்வார்;
உலகம் ஒளியை வெல்லாது.
பொருளாயிதனைப் பாடி வடிப்பேன்;
புனைந்துரைத்தல் இல்லாது!
ஆமென்.
-செல்லையா.