ஒடுக்கப்பட்ட பெண்கள் எனினும்!



​ஒடுக்கப்பட்ட பெண்கள் எனினும்!

நற்செய்தி மாலை: மாற்கு 15:40-41.
பெண்கள் சிலரும் தொலையில் நின்று உற்று நோக்கிக்கொண்டிருந்தனர். அவர்களுள் மகதலா மரியாவும் சின்ன யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாகிய மரியாவும், சலோமி என்பவரும் இருந்தனர். இயேசு கலிலேயாவில் இருந்த போது அவர்கள் அவரைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்து வந்தவர்கள், அவருடன் எருசலேமுக்கு வந்திருந்த வேறுபல பெண்களும் அங்கே இருந்தார்கள்.”
நற்செய்தி மலர்:
கடுக்கன் ஒன்றைக் காதில்போட்டு,
கரை திரை அலையும் காளையரே,
அடுக்கடுக்காகத் துன்பம் கண்டு 
அஞ்சி ஓடினால் கோழையரே.
இடுக்கண் வந்தால், தேவை துணிவு;
எங்கு உண்டிவ் வேளையிலே?
ஒடுக்கப்பட்ட பெண்கள் எனினும்,
உணர்வைக் காண்பீர் எழையிலே!
ஆமென்.

Leave a Reply