அரிமத்தியாரின் துணிவு!

அரிமத்தியாரின் துணிவு!
நற்செய்தி மாலை: மாற்கு 15:42-43.
“இதற்குள் மாலை வேளையாகிவிட்டது. அன்று ஓய்வுநாளுக்கு முந்திய ஆயத்த நாளாக இருந்தபடியால், அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் துணிவுடன் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். அவர் மதிப்புக்குரிய தலைமைச் சங்க உறுப்பினர். அவரும் இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர்.”
நற்செய்தி மலர்:
அஞ்சி நடுங்கிய அடியார் ஒளிய,
அரிமத்தியாரோ துணிந்து சென்றார்.
கெஞ்சிக் கேட்பவராக அல்ல,
கிறித்துவின் உடலை உரிமை என்றார்.
மிஞ்சிப்போன பிலாத்துவும்கூட,
மேல் பேசாது வியந்து நின்றார்.
வஞ்சம் எதிர்க்கத் துணிவு வேண்டும்;
வாய்மையில் வாங்கினோர் வென்றார்!
ஆமென்.

Image may contain: text

Leave a Reply