எழுபது!

எழுபது!  

எழுகிற  எழுபதை எனக்கும் கொடுக்கும்,  
என்னுயிர் இறையே போற்றுகிறேன்.  
விழுகிற உடலை விழாதும் தடுக்கும்,    
விண்மகன் ஏசுவே போற்றுகிறேன்.  
தொழுகிற நெஞ்சில் உண்மையும் ஊற்றும், 

தூய்மையின் ஆவியே போற்றுகிறேன்.  
அழுகிற  நாட்டின் அவலமும் மாற்றும்,  
அதுதான் வேண்டல், போற்றுகிறேன்!  

-கெர்சோம் செல்லையா.

Leave a Reply