ஊரார் நேர்மைக்கு ஏங்குகிறார்!
கற்றவர் என்று கணக்கைக் காட்டி,
காசால் பதவியை வாங்குகிறார்.
மற்றவர் படுந்துயர் உணராதவராய்,
மடியராய்ப் பணியில் தூங்குகிறார்.
ஒற்றைக் காசையும் உருவி எடுத்து,
ஊழலில் தலைமை தாங்குகிறார்.
உற்றவருக்கே உதவி என்றானதால்,
ஊரார் நேர்மைக்கு ஏங்குகிறார்.
-கெர்சோம் செல்லையா.
