ஊரார் ஏற்கவில்லை!

ஊரார் என்னை ஏற்கவில்லை!கிறித்துவின் வாக்கு: லூக்கா 10:10-12.

10யாதொரு பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கிறபொழுது, ஜனங்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதின் வீதிகளிலே நீங்கள் போய்:
11எங்களில் ஒட்டின உங்கள் பட்டணத்தின் தூசியையும் உங்களுக்கு விரோதமாய்த் துடைத்துப்போடுகிறோம்; ஆயினும் தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறதென்பதை அறிந்துகொள்வீர்களாக என்று சொல்லுங்கள்.
12அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் அந்த நாளிலே சோதோம் நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

கிறித்துவில் வாழ்வு:
உந்தன் வாக்கை ஊரில் உரைத்தேன்;
ஊரார் என்னை ஏற்கவில்லை.
சொந்தம் பேசும் உறவிற்குரைத்தேன்;
சொற்படி வாழ்வதும் பார்க்கவில்லை.
எந்தன் குறையால் வந்த தவறா?
ஏன் என்றெனக்குத் தெரியவில்லை.
தந்தை இறையே, தாழ்ந்து பணிந்தேன்;
தண்டனக்கு இது நேரமில்லை!
ஆமென்.

Leave a Reply